 |
Pongal Celebration ஆக்லாந்து முத்தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவினை இரண்டாம் தலைமுறையினர் ஏற்று நடத்தியது அனைவரது வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.உலையில் அரிசியிட்டு குழந்தைகள் பொங்கிய பொங்கல்,தமிழ்த்தாய் வாழ்த்து,நியூசிலாந்து தேசியகீதம் என தமிழ்ப்பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியினை துவக்கினர்.திருமதி.மாலதி மதனகோபால் அவர்கள் குத்துவிளக்கு ஏற்ற தமிழே திருநாள்,தையே தமிழ்புத்தாண்டு என்று இயற்தமிழும், 'என் இனிய பொன்னிலாவில், 'வெள்ளை புறா', என்று இசைத்தமிழும்,கொலைவெறி நடனம் என நாடகத்தமிழும் அரங்கேறியது. பின்னர் வந்திருந்தோர் அனைவரும் பங்கேற்ற வினாடி-வினா ஒன்றையும் இரண்டாம் தலைமுறை நடத்தியதை அனைவரும் வியந்து பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் எல்லோருக்கும் விருந்து படைத்து மகிழ்ந்தது முத்தமிழ் சங்கம்.
This year's Pongal vizha was a novel one in its concept and had all the makings of a good MTS event. A huge thanks to our youngsters who meticulously planned, prepared and executed the event on their own. The new ideas and energy that these youngsters displayed at the event brought forward a new sense of belonging and pride for our young generation. Well done to the young team. On behalf of the committee we wish to thank and acknowledge the wonderful efforts of the following people for making the Pongal vizha a happy and an enjoyable event. |
 |
Sangam Nite Celebration ஆக்லாந்து முத்தமிழ் சங்கத்தின் சார்பில் " சங்கம் கலை இரவு " கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இரவு Mt Roskill பள்ளி அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முத்தமிழ் சங்க பள்ளி மாணவ,மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் New Zealand நாட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் தலைவர் திரு.நாதன் சாமிநாதன் அவர்கள் தலைமை உரையாற்றினார். நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் Dr.Jackie Blue அவர்கள் இந்திய பண்பாட்டினை பற்றி சிறப்புரை ஆற்றினார்.இவர் இந்திய உடையில் கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. முத்தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் ஆடல்,பாடல் மற்றும் குறு நாடகம் என நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. நிகழ்ச்சியினை சங்கத்தின் பொருளாளர் திரு ஸ்ரீதர்.நாகப்பன் அவர்கள் தொகுத்து வழங்கினர். சிறப்பாக பணியாற்றிய திருமதி.சசி இந்திரன்,திருமதி.உமா பிரசாத்,திருமதி.ஸ்ரீதேவி கதிரவன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். துணை தலைவர் திரு.பாலசுப்ரமணியன் சந்தானகிருஷ்ணன் அவர்கள் நன்றிஉரை வழங்கினர். இரவு விருந்திற்கு பிறகு விழா இனிதே முடிவுற்றது. நிகழ்ச்சியில் 3 தமிழும், விருந்தில் 6 சுவையும் படைத்து சங்கம் இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு பொன்மாலை பொழுதினை தந்தது முத்தமிழ் சங்கம்.குடும்பங்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றது நினைவில் நிறுத்த வேண்டிய அனுபவம்.
சங்கங்களால் - நல்ல சங்கங்களால் - மக்கள் சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம் 'Sangangalal - nalla Sangangalal - makkal Saathithal koodum perunperun kaariyam' The poet Bharathidasan's words truly reflected the Sangam Nite cultural evening. Any community organisation is "for the people, of the people and by the people" and so does Muthtamil Sangam. Helped by the good weather, Sangam event turned out to be memorable for more ways than one. All the programs were well received and appreciated.The food was great. The social gathering in a great environment had the community in good cheer for the entire evening. |
 |
Environment Cleaning ... |
 |
Blood Donation ... |
 |
Potluck Dinner Muthtamil Sangam started its first activity for this year with a potluck dinner on 23rd July, 2011, Saturday. |